Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சட்டப் போராட்டத்தில் தோல்வி: ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறினார் ஜோகோவிச்

மெல்பர்ன்: பிரபல டென்னிஸ் வீரர்நோவக் ஜோகோவிச், 2-வது முறையாக விசா ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட ரீதியான போராட்டத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து ஆஸ்திரேலியாவை விட்டு அவர் வெளியேறினார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இன்று (17ம் தேதி) ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே கடந்த 6-ம் தேதி மெல்பர்ன் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரை விசாரித்த அதிகாரிகள், போதுமான மருத்துவ ஆவணங்கள் இல்லை எனக்கூறி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்து விசாவை ரத்து செய்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்