பெங்களூரு: ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது.இதில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ஏலம் எடுக்க 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் அவரை, பஞ்சாப் அணி ரூ.11.50 கோடிக்கு வாங்கியது.
கடந்த சீசனில் லியாம் லிவிங்ஸ்டன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் ஷாமிகா கருணாரத்னேவை ரூ.50 லட்சத்துக்கும், தமிழகத்தின் பாபா இந்திரஜித்தை ரூ.20 லட்சத்துக்கும் கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.
0 கருத்துகள்