பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்றும், நாளையும் (பிப்.12, 13) பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கான வீரர்கள் பர்ஸை பதம் பார்க்க மாட்டார்கள் என்றும், எல்லா எதிர்பார்ப்பும் இரண்டு புதிய அணிகளின் மீதே குவிந்திருக்கிறது என்றும் கள நிலவரம் தெரிவிக்கிறது.
ஏலத்தில் எத்தனை வீரர்கள்: ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இடம் பெறுகின்றன. இதற்கிடையே ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1,214 வீரர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இதன்படி ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் 228 சர்வதேச வீரர்களும், சர்வதேச கிரிக்கெட் டில் விளையாடாத 355 வீரர்களும் அடங்குவர். இதில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.
0 கருத்துகள்