பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல்நாளில் அன் கேப்டு பிளேயர்ஸ் எனப்படும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களை ஏலம் எடுப்பதில் அணி உரிமையாளர்கள் ஆர்வம் காட்டினர். இதில், மற்ற அனைவருக்கும் சர்ப்ரைஸாக அமைந்த வீரர் என்றால் அது கர்நாடக வீரர் அபினவ் மனோகர் சதராங்கனி ஏலம் தான்.
அவருக்கு அடிப்படை விலை ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடும்போட்டி போட்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.2.60 கோடிக்கு அவரை வாங்கியது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில், அதிகம் அறியப்படாதவர் இந்த அபினவ் மனோகர். மேலும், மூன்று மாதங்கள் முன்பு தான் இவர் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அதற்குள் இவ்வளவு மவுசு ஏற்படவும், ஏலம் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டியதன் பின்னணியில் அவரின் பெர்பாமென்ஸ் காரணமாக உள்ளது.
0 கருத்துகள்