Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இஷான் கிஷனை தவிர வேறு சாய்ஸ் இல்லை - மே.இ.தீவுகள் தொடர் குறித்து ரோஹித்

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தன்னுடன் இஷான் கிஷன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். முன்னணி வீரர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓப்பனிங் ஆப்ஷனுக்கு வேறு சாய்ஸ் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர் நாளை அகமதாபாத்தில் நரேந்தி மோடி மைதானத்தில் போட்டிகள் தொடங்குகிறது. முதல்முறையாக முழுநேர கேப்டனாக இந்த தொடர் மூலம் ரோஹித் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். இந்நிலையில்தான் ஓப்பனர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், நெட் பவுலர் நவ்தீப் சைனிக்கும், மேலும் அணியின் உதவியாளர்கள் மூவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் முழுமையாக குணம்பெறும் வரை தனிமையில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்