Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

U-19 உலகக் கோப்பை: 5வது முறை கோப்பையை வெல்லுமா இந்திய இளம்படை - 190 ரன்கள் இலக்கு

ஆண்டிகுவா: யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதிவருகின்றன. இதில் இந்திய அணி தனது வலிமைக்க பவுலிங்கால் இங்கிலாந்தை சுருட்டியுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒப்பனர்களாக ஜார்ஜ் தாமஸ் மற்றும் ஜேக்கப் பீத்தல் வந்தனர். இந்த சீசனில் இங்கிலாந்தின் தொடர் வெற்றிக்கு மிக முக்கிய தூணாக இருந்த இந்த ஜோடியை இரண்டாவது ஓவரிலேயே பிரித்தார் இந்திய பவுலர் ரவிக்குமார். இரண்டே ரன்களில் அவரை வெளியேற்றினார். அடுத்துவந்த இங்கிலாந்து கேப்டன் டாம் பெர்ஸ்ட்டை அதே ரவிக்குமார் தனது இரண்டாவது ஓவரில் டக் அவுட் செய்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்