Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேரளா: காதலர் தினத்தில் கரம் கோர்த்த திருநங்கை- திருநம்பி ஜோடி

காதலர் நாளன்று திருவனந்தபுரத்தில் திருநங்கை- திருநம்பி காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்டவர்  திருநம்பி மனு கார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார். இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக இருப்பவர் திருநங்கை சியாமா பிரபா (31). இவர்கள் இருவரும் கடந்த 10  ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், காதலர் தினமான நேற்று திருவனந்தபுரத்தின் இடுப்பாஞ்சியில் உள்ள அழகாபுரி அரங்கத்தில்  திருமணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து உறவினர்களும், நண்பர்களும்  தம்பதியை வாழ்த்தினர்.

image

இந்த ஜோடி, திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே தங்கள் திருமணத்தை பதிவு செய்ய முயன்று வருகிறது. இதற்காக நீதிமன்றத்தை அணுகவுள்ளனர்.

இதையும் படிக்க: ‘வைதேகிகள் காத்திருக்கிறார்கள்’ நடராஜன்களுக்குத்தான் காதல் கண்கள் தெரிவதில்லை! காதல் வாழ்க



Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்