Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

U-19 உலகக் கோப்பையை வென்றது இந்தியா | 5-வது முறையாக சாம்பியன்!

ஆண்டிகுவா: யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. ராஜ் பாவாவின் அட்டகாசமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் துணையுடன் இந்திய இளம்படை தனது இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி மகுடம் சூடியது.

இப்போட்டியில் 190 என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்தியப் பந்துவீச்சின் சிறப்பான ஆட்டத்தால் 189 ரன்களில் இங்கிலாந்தை சுருட்ட முடிந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்