Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'பெருமை கொள்ளும் தருணம்'- சென்னையில் நடைபெறுகிறது செஸ் ஒலிம்பியாட் 2022

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட்  போட்டி  சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  செஸ் ஒலிம்பியாட்  போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்க  உள்ளனர்.

image

இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னை நடத்தவுள்ளதைப் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இது தமிழ்நாட்டுக்கொரு பெருமைமிகு தருணம். உலகம் முழுவதும் இருந்து வருகை தரும் செஸ் விளையாட்டின் மன்னர்களை வரவேற்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இமயமலையில் பல்வேறு விளையாட்டு கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி: மதிப்பு எவ்வளவு?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்