பெங்களூரு: பெங்களூரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 447 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 35.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்கள் வீழ்த்தினார். அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
0 கருத்துகள்