Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | அசத்தல் பார்ட்னர்ஷிப்... கடைசி ஓவரில் முதல் வெற்றியை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்

மும்பை: லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

159 ரன்கள் இலக்குடன் குஜராத் அணிக்கு மேத்யூ வாட் மற்றும் சுப்மன் கில் இருவரும் துவக்கம் தந்தனர். முதல் இன்னிங்சில் எப்படி ஷமி அதிர்ச்சி கொடுத்தாரோ, அதேபோல் துஷ்மந் சமீராவும் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே சுப்மன் கில்லை டக் அவுட் செய்தார். ஒன் டவுனில் விஜய் சங்கர் இறங்கினார். இவரையும் தனது அடுத்த ஓவரில் கிளீன் போல்டக்கினார் சமீரா. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி தடுமாற்றம் கண்டது. எனினும் மேத்யூ வாட் உடன் இணைந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 30 ரன்களை கடந்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த டேவிட் மில்லரும் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்