Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரிட்டையர்டு அவுட் ஆகி சர்ச்சையை உருவாக்கிய அஸ்வின் - என்ன சொல்கிறது விதி?

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிட்டையர்டு அவுட் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை வெளியேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. 166 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் 18.2-வது ஓவரில் ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறினார். 23 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் சேர்த்திருந்தார் அஸ்வின்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்