Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | பிரசித் கிருஷ்ணா வேகத்தில் வீழ்ந்த டெல்லி - ராஜஸ்தான் அணி 15 ரன்களில் வெற்றி

மும்பை: ஐபிஎல் 15-வது சீசனின் 34-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

223 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ஓப்பனிங் செய்த பிரிதிவி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியாக இன்னிங்ஸை துவக்கினர். எனினும், வார்னர் 28 ரன்களில் ஆட்டத்தின் 5வது ஓவரில் வெளியேறினார். அவரின் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா எடுத்தார். இதன்பின் வந்த சர்ப்ராஸ் கான் 1 ரன்னோடு வந்த வேகத்தில் வெளியேற, 10வது ஓவரின் கடைசி பந்தில் பிரிதிவி ஷாவும் அவுட் ஆனார். அவர் 37 ரன்கள் எடுத்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்