மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
மும்பையில் நடந்த ஐபிஎல் 15வது சீசன் 24வது போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் ஓப்பனிங் ஜோடியும், ஒன் டவுன் இறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கர் குஜராத் அணியின் டாப் ஆர்டர் சொதப்பினாலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் இளம் வீரர் அபினவ் மனோகர் உதவியால் அந்த அணி இருபது ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்தது 194 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 87 ரன்களும், அபினவ் மனோகர் 43 ரன்களும் எடுத்திருந்தனர்.
0 கருத்துகள்