மும்பை: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 15வது சீசனின் 19-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில டாஸ் வென்ற லாக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர், தேவ்தட் படிக்கல் இணை துவக்கம் கொடுத்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையை 5 ஓவர் வீசிய ஆவேஷ்கான் பிரித்தார். அவர் வீசிய பந்து பட்லரைக்கடந்து ஸ்டேம்பை தட்டித்தூக்கியது. 13 ரன்களிலேயே அவர் நடையைக் கட்டினார். களத்துக்கு வந்த சஞ்சு சாம்சன், தேவ்தட் படிக்கலுடன் கைகோத்தார்.
0 கருத்துகள்