Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாவிட்டால் உலகம் ஒன்றும் அழிந்து விடாது - சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 55-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.4 ஓவர்களில் 117 ரன்களில் ஆட்டமிழந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது:

இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தினோம். பேட்ஸ்மேன்கள் மிகவும் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். இது மாதிரியான வெற்றி முன்னதாகவே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ரன்களை அதிகமாக குவிக்கும் போது பந்து வீச்சாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும். டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது அவசியமாகும். முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் திறமையானவர்கள். இவர்கள் ஆட்டத்தில் முதிர்ச்சி அடைய நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்