Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோ கோ தொடரில் ஒடிசா அரசு - அணியின் உரிமையைப் பெற்றது

புதுடெல்லி: அல்டிமேட் கோ கோ தொடருக்கு பெரிய ஊக்கம் அளிக்கும் வகையில் ஒடிசா அரசாங்கம் அணியின் உரிமையைப் பெற்றுள்ளது.

2013-ம் ஆண்டு ஹாக்கி இந்தியா லீக்கில் கலிங்கா லான்சர்ஸ் அணியின் உரிமையை வைத்திருந்த ஒடிசா அரசு, தற்போது நேரடியாக 2-வது விளையாட்டாக கோ கோ-வை கையில் எடுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கே லோ இந்தியா இளையோர் விளையாட்டில் கோ கோ போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒடிசா வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தது. அடுத்த சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்