புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த ஒப்போ நிறுவனம் ரூ.4,390 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்தது வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 48 இடங்களில் வருவாய் புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை மேற் கொண்டனர். இதில், விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக வெளிநாட்டில் உள்ள வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. குறிப்பாக, நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்யவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
0 கருத்துகள்