துபாய்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி விளையாடமால் பின்வாங்கி உள்ளது. அதனால் இப்போது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேரடியாக தகுதி பெறுவதில் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி வாக்கில் ஆஸ்திரேலிய நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது தென்னாப்பிரிக்கா. ஆனால் ஜனவரியில் தங்கள் நாட்டில் ஐபிஎல் போலவே நடைபெறவுள்ள டி20 லீக் தொடர் காரணமாக இந்த ஒருநாள் தொடருக்கான அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் (CSA).
0 கருத்துகள்