புதுடெல்லி: உலக விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
அமெரிக்காவின் பர்மிங்காம் நகரில் உலக விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்வில்வித்தையில் கலப்பு அணிகள்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகாஜோடி மெக்சிகோவின் ஆண்ட்ரியாபெசெரா, மிகுவல் பெசெரா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி 157-156 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.
0 கருத்துகள்