Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வர்த்தக முறைகேட்டில் ஈடுபடும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: முறைகேடான வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங், இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கத்தின் (ஐஏஎம்ஏஐ ) கீழ் இயங்கும், சுய ஒழுங்குமுறை அமைப்பான இந்தியா எட்-டெக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் IEC உறுப்பினர்களான பைஜூஸ், வேதாந்து, அப்கிரேடு, அன் அகாடமி, கிரேட் லேனிங், ஒயிட்ஹேட் ஜூனியர், சன்ஸ்டோன் மற்றும் ஐஏஎம்ஏஐ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்