ஓவல்: இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றாலும், சூர்யகுமார் யாதவ் (SKY) விளாசிய சதம் இந்திய ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
216 ரன்கள் டார்கெட்டை துரத்திய இந்திய அணி 13 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களத்திற்கு வந்தார் சூர்யகுமார் யாதவ். அடுத்த சில பந்துகளில் கேப்டன் ரோகித்தும் தனது விக்கெட்டை பறிகொடுக்க, மொத்த அழுத்தமும் சூர்யகுமார் யாதவ் மீதும், ஷ்ரேயஸ் ஐயர் மீதும் விழுந்தது. ஷ்ரேயஸைவிட, அந்த அழுத்தத்தை திறமையாக கையாண்டது சூர்யகுமாரே. இங்கிலாந்து பவுலர்களை எளிதாக சமாளித்த அவர், 31 பந்துகளில் அரைசதமும் அடுத்த 17 பந்துகளில் சதமும் எடுத்தார்.
0 கருத்துகள்