Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜூன் மாதத்தில் 22 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

புதுடெல்லி: ஜூன் மாதத்தில் மட்டும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ்அப் கணக்குளை முடக்கியதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசின் புதிய விதிகளின் கீழ் சமூகவலைதள நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள், அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம், ஆபாசம், சமூக பிளவைத் தூண்டுதல் உள்ளிட்ட தன்மை கொண்ட பதிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக பயனாளர்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும். புகார்களை விசாரிப்பதற்கென்று தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டும். புகார்கள் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்