Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

5ஜி அலைக்கற்றை ஏலம் | ரூ.88 ஆயிரம் கோடியுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் - மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு விற்பனை

புதுடெல்லி: கடந்த 7 நாட்களாக நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று முடிவடைந்தது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு விற்பனையானது. இதில் ரூ.88 ஆயிரம் கோடியுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது.

தொலைத் தொடர்பு துறையில் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் செல்போன்களின் இணையதள வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும். தானாக இயங்கும் கார், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உருவாகி வரும் சூழலில், 5ஜி சேவைக்கான தேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சேவை முக்கிய நகரங்களில் வரும் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்