இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3-ம் தரப்பினர் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா), அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை இந்தியா இழந்துள்ளது. 85 வருட வரலாற்றில் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு, பிஃபா-வால் தடை செய்யப்படுவது இதுவே முதன்முறை.
இதுதொடர்பாக பிஃபா விடுத்துள்ள அறிக்கையில், “சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் சட்டங்களை கடுமையாக மீறும் மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கின் காரணமாக, அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக இடைநீக்கம் செய்ய பிஃபா கவுன்சிலில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
0 கருத்துகள்