Header Ads Widget

Breaking News

இந்திய கால்பந்து சங்கத்துக்கு விதித்த தடையை நீக்கியது பிஃபா

புதுடெல்லி: அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை பிஃபா நீக்கியுள்ளது. இதன்காரணமாக திட்டமிட்டபடி மகளிர் உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3-ம் தரப்பினர் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா), அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு சில தினங்கள் முன் இடைக்கால தடை விதித்து. மேலும், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு அமைப்பு கலைக்கப்பட்டு அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் கீழ் இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அனைத்து தினசரி நிர்வாகக் கட்டுப்பாடுகளும் வருகிறதோ அன்று தடை நீங்கும் என்று பிஃபா அறிவித்திருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்