சென்னை: சென்னையை சேர்ந்த சர்வதேச வாள்வீச்சு வீராங்கனையான சி.ஏ.பவானி தேவி லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் தனிநபர் சேபர் பிரிவில் தங்கப் பதக்கமும், அணிகள்பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். பதக்கம் வென்ற பவானி தேவி நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பவானி தேவி நிருபர்களிடம் கூறும்போது, “காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக கடுமையாக போராட வேண்டும். கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏராளமான போட்டிகளில் பங்கேற்று தகுதி பெற வேண்டும். இதற்கான தகுதிப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.
0 கருத்துகள்