Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் ‘ஏகே-203’ ரக துப்பாக்கிகள் தயாரிப்பு?

லக்னோ: நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் ‘ஏகே-203’ ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளன. இதனை ரஷ்ய தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி முகாமையான பிடிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2019 வாக்கில் தொடங்கப்பட்ட இந்த தனியார் லிமிடெட் நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் இதற்கான உற்பத்தி கூடத்தை நிறுவியுள்ளது. இந்த கூடத்தில் தான் ‘ஏகே-203’ ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்