Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

T20 WC | பாக். அணிக்கு எதிராக விளையாடும் வீரர்களை முடிவு செய்துவிட்டேன் - இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தகவல்

மெல்பர்ன்: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

கடைசி நிமிட முடிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அணித் தேர்வு குறித்து வீரர்களுக்கு முன்பே தெரியப்படுத்த விரும்புகிறோம், இதனால் போட்டிக்கு அவர்கள் முன்கூட்டியே தயாராகலாம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கான விளையாடும் லெவன் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. அதில் உள்ள வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிட யோசனைகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்