Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

8 நானோ செயற்கைக்கோள்களை நவம்பர் 26-ல் விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரும் 26-ம் தேதி விண்வெளிக்கு பிஎஸ்எல்வி-54 ராக்கெட் மூலம் 8 நானோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இஸ்ரோ தற்போது விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ தலைமையகம் வெளியிட்ட அறிக்கை.

வரும் சனிக்கிழமை (நவ.26) காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி-54 ரக ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ராக்கெட் மூலம் ஓசியான்சாட்-3 மற்றும் எட்டு நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. பூட்டான்சாட், பிக்ஸலின் ஆனந்த், துருவா ஸ்பேஸின் இரண்டு தைபோல்ட், யுஎஸ்ஏ ஸ்பேஸ்ப்ளைட்டின் நான்கு ஆஸ்ட் ரோகாஸ்ட் செயற்கைக்கோள்கள் ஆகியவையே அந்த எட்டு நானோ செயற்கைக்கோள்களாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்