Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராக தடகள வீராங்கனை பி.டி. உஷா தேர்வு

புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் தலைவர் பதவிக்கு பி.டி.உஷாவை தவிர மற்ற யாரும் போட்டியிடவில்லை. இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

58 வயதான பி.டி. உஷா கடந்த 1984-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டிருந்தார். எனினும் ஆசிய விளையாட்டில் 4 தங்கம் உட்பட 11 பதக்கங்களை வென்று குவித்தார். இந்திய மற்றும் ஆசிய அளவில் தடகளத்தில் 20 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய பி.டி. உஷா இறுதியாக 2000-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்