Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

FIFA WC 2022 | உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றம் - கண்ணீர் விட்டு கதறி அழுத நெய்மருக்கு ஆறுதல் கூறிய குரோஷிய வீரரின் மகன்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் அடைந்த தோல்வியால் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இதை பார்த்த குரோஷியா அணியின் வீரர் இவான் பெரிசிச்சின் மகன் களத்துக்குள் வந்து நெய்மரை சமாதானம் செய்தார். இது அனைவரையும் உருக வைத்தது.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பிரேசில் – குரோஷியா அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் 105-வது நிமிடத்தில் நெய்மர் எதிரணியின் டிபன்டர்களை அற்புதமாக கடந்து கோல் அடித்தார். இதனால் பிரேசில் 1-0 என முன்னிலை வகித்தது. போட்டி முடிவடைய 3 நிமிடங்களே இருந்தநிலையில் பிரேசில் அணியின் கனவிற்கு முதல் முட்டுக்கட்டை போட்டது குரோஷியா.


கருத்துரையிடுக

0 கருத்துகள்