டாக்கா: 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுமா என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா.
நாளை வங்கதேச அணிக்கு எதிராக தொடங்க உள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா வெல்ல வேண்டும். அப்போதுதான் அதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு உயிர்ப்போடு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்