புதுடெல்லி: மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமையை ரூ.951 கோடிக்கு வயகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
மகளிருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை முதன் முறையாக பிசிசிஐ நடத்த உள்ளது. 5 அணிகள் கலந்து கொள்ளும் இந்ததொடரின் அனைத்து ஆட்டங்களும் மும்பையில் நடைபெறுகின்றன. இந்த தொடரில் கலந்து கொள்ளும் அணிகளின் விவரம் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து போட்டிகளை மார்ச் முதல் வாரத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
0 கருத்துகள்