Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சாதிக்குமா ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி? - இலங்கையுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்

மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா, இலங்கை அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை சந்திக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியானது தலா 3 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி 20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால், சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய அணி நிர்வாகம் அதிக முன்னுரிமை வழங்காது என்றே கருதப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்