திருவனந்தபுரம்: இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்காக பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் சதம் விளாசினர். பவுலிங்கில் சிராஜ் அபாரமாக பந்து வீசி அசத்தினார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி ஞாயிறு (ஜனவரி 15) அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
0 கருத்துகள்