குவாஹாட்டி: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
குவாஹாட்டியில் உள்ள பார்சபரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடி சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தது. 5-வது அரை சதத்தைவிளாசிய ஷுப்மன் கில் 60 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் தசன் ஷனகா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
0 கருத்துகள்