எதிர்வரும் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரேஸ் வாக்கரான அக்‌ஷ்தீப் சிங். ராஞ்சியில் தேசிய ஓபன் ரேஸ் வாக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அவர் 20 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 19 நிமிடங்கள் 55 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்துள்ளார். இது தேசிய சாதனையாகவும் அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள பர்னாலா மாவட்டத்தில் உள்ள கஹ்னேகே கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதான அக்‌ஷ்தீப். முந்தைய தேசிய சாதனையாக இருந்த 1:20:16 அவர் தகர்த்துள்ளார். ஆடவர் 20 கிலோ மீட்டர் ரேஸ் வாக்கிற்க்கு பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் என இரண்டுக்கும் தகுதியாக 1:20:10 நேரம் உள்ளது. அதைக்காட்டிலும் 15 நொடிகள் முன்கூட்டியே அவர் பந்தய தூரத்தை கடந்து தகுதி பெற்றுள்ளார்.
0 கருத்துகள்