புதுடெல்லி: தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், அரசின் ஊடக பிரிவான பிஐபி எனப்படும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ மூலம் உண்மை தன்மையைக் கண்டறிவது தொடர்பான முன்மொழிவு குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில் கூறியிருப்பதாவது: இணைய வசதியின் பெருக்கத்தால் அதிக அளவிலான இந்தியர்கள் தற்போது இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வளர்ச்சியால் பிழையான, உண்மைக்கு புறம்பான, தவறாக வழிநடத்தும் தகவல்களும் அதிகரித்துள்ளன. அவ்வாறன தகவல்களை வெளியிடும் மக்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளன.
0 கருத்துகள்