Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தென் இந்திய வீரர்களை மட்டம் தட்டுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ?- முரளி விஜய் காட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரோஹித் சர்மா தன் முதல் சதத்தை அபாரமான ஒரு இன்னிங்சில் எடுத்ததன் மூலம் வர்ணனை அறையில் அரைசதங்களை சதமாக மாற்றும் திறன் படைத்த வீரர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் விவாதத்திற்கு வந்த போது சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறிய ஒரு வார்த்தை தென் இந்தியர்களை குறைத்து எடைபோடுவதாக அமைந்துள்ளதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இந்திய தொடக்க வீரர் முரளி விஜய் தன் காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

நேற்று 2ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அறிமுக ஆஃப் ஸ்பின்னர் தன் அனுபவ சகா நேதன் லயனைக் காட்டிலும் சிறப்பாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுவும் வந்தவுடன் இரவுக்காவலன் அஸ்வினையும், புஜாராவையும் வீழ்த்தினார். பிறகு பரிசு விக்கெட்டான விராட் கோலியையும், அறிமுக விக்கெட் கீப்பர் ஸ்ரீகார் பரத்தையும் வீழ்த்தி 5 விக்கெட்டுகளை அறிமுக டெஸ்ட்டிலேயே கைப்பற்றி சாதனை புரிந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்