Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸி இன்று மோதல்: 2020 தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

மும்பை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.

கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப காரணங்களுக்காக இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்க உள்ளது. டி 20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழி நடத்தி இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு தலைமையேற்பது இதுவே முதன்முறை. குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் இந்திய அணியின் எதிர்கால கேப்டன் என ஹர்திக் பாண்டியா மீது முத்திரை குத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய ஆட்டம் அவரது கேப்டன் திறனை சோதிப்பதற்கான களமாக இருக்கக்கூடும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்