துபாய்: துபாய் டூட்டி ப்ரீ ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிச் சுற்றில் டேனியல் மேத்வதேவ், சகநாட்டு வீரர் ஆந்த்ரே ரூபலேவுடன் மோதினார். இதில் மேத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரூபலேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
0 கருத்துகள்