Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“ரவி சாஸ்திரி... நீங்கள் வெளியில் இருப்பவர், உங்கள் கருத்து தேவையற்றதே” - ரோகித் சர்மா காட்டம்

இந்தூர் டெஸ்ட்டில் தோல்வி அடைந்தது குறித்து ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “குழிப் பிட்ச் நமக்கு எதிராக திரும்பும் தன்மை கொண்டது என்று கூறுவதற்குப் பதிலாக, இந்திய அணியினரின் மிகை நம்பிக்கை, நம்மதான் வெற்றி பெறுவோம் என்ற ஒருவகையான உத்தரவாத மனநிலை, ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆர்வம் ஆகியவையே தோல்விக்கு காரணம் என்று கூறியிருக்கிறார். ரவி சாஸ்திரியின் இந்தக் குற்றச்சாட்டை கேப்டன் ரோகித் சர்மா மறுத்துள்ளார்.

ரவி சாஸ்திரி இந்திய அணியுடன் 7 ஆண்டுகள் இருந்திருக்கின்றார். ஓய்வறையில் வீரர்கள், கேப்டன், சக பயிற்சியாளர்களின் மனநிலை இதையெல்லாம் ரவி சாஸ்திரி நன்கு அறிந்தவர்தான். ஆனால், அவரை சட்டென ரோகித் சர்மா, ‘வெளியில் இருப்பவர்கள் இப்படி மிகை நம்பிக்கை என்று கூறுவதெல்லாம் குப்பைத்தனமான வாதம்’ என்று ஒரே அடி அடித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்