Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மிட்செல் ஸ்டார்க் அச்சுறுத்தலை சமாளிக்குமா இந்திய அணி? - ஆஸ்திரேலியாவுடன் சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை

சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஒருநாள் போட்டித் தொடரை வெல்லும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மோதுகின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்