குவாலியர்: நடப்பு ஆண்டுக்கான இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் அவர் எடுத்திருந்தார். இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இரானி கோப்பையின் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஆண்டுதோறும் இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டாரத்தில் முதல் தர கிரிக்கெட் போட்டியாக இரானி கோப்பை நடத்தப்படுகிறது. இதில் ரஞ்சிக் கோப்பையை வென்ற அணியுடன் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி விளையாடும். ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் ரஞ்சிக் கோப்பையில் மாநிலம் சார்பாக விளையாடிய வீரர்கள் இடம் பிடிப்பார்கள்.
0 கருத்துகள்