Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs AUS | ரிஷப் பந்த் இருந்திருந்தால் லயனையும், குனேமனையும் பொளந்திருப்பார்: டேனிஷ் கனேரியா

கராச்சி: இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்தை அதிகம் மிஸ் செய்து வருவதாவும், அவர் இருந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் நேதன் லயன், மேத்யூ குனேமனை பொளந்து கட்டி இருப்பார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வருகின்றனர். இதனால் இந்திய அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்து வருகிறது. இந்த சூழலில் கனேரியா இதை சொல்லியுள்ளார். கடந்த டிசம்பரில் பந்த் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்