Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14-ல் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தகவல்

சென்னை: மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 முதல் 20-ம் தேதி வரை சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெறும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உலக அலைச்சறுக்கு லீக்கின் ஒரு கட்டமாக சர்வதேச அலைச்சறுக்கு ஓபன் மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 14 முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம், இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்துகின்றன. சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இந்தியாவில் நடத்தப்பட உள்ளது இதுவே முதன்முறையாகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்