Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'டேய் துபே அவுட் ஆகுடா...' - தோனியைப் பார்ப்பதற்காக பொறுமை இழந்த சிஎஸ்கே ரசிகர்கள்!

ஆளுமை அல்லது நாயக வழிபாடு என்பது காலங்காலமாக ஊறிப்போன நம் மரபில் இத்தகைய நிகழ்வுகள் ஆச்சரியமளிக்கக் கூடியதல்ல. நேற்று சிஎஸ்கே அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் ஷிவம் துபே ஆடும்போது, அவரை ‘வெளியே போ’ அவுட் ஆகு என்று சிஎஸ்கே ரசிகர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது, தங்கள் தல தோனியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே என்றாலும் இன்னொரு வீரரை மட்டம் தட்டுவது என்பது கும்பல் மனப்பான்மையின் ஓர் எதிர்மறை செயலாகும்.

இத்தனைக்கும் ஷிவம் துபே கொஞ்சம் ஆரம்பத்தில் திணறினாலும், மார்க் உட் அவரைப் படுத்தி எடுத்தாலும் 2 அடுத்தடுத்த பவுண்டரிகளையும் லக்னோவின் சிறந்த ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் பந்துகளில் அடுத்தடுத்து 2 சிக்சர்களையும் விளாசினார். ஆனால், இவரது ஆட்டத்தை ரசிக்க மனமில்லாமல் தோனி வர வேண்டும் என்பதற்காக ‘டேய் துபே அவுட் ஆகுடா’ என்று ஒரு கூட்டம் தொடர்ந்து கத்தியபடியே இருந்தது. துபேயை நோக்கி இப்படி ரசிகர்கள் கூப்பாடு போடுவது முதல் முறையல்ல, இதே சீசனில் சிஎஸ்கே-யின் பயிற்சியின் போது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்ட அன்றும் டேய் ஷிவம் துபே என்று ரசிகர்கள் கூச்சலிட்டதும் நடந்ததாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தன. இவர்களுக்கு தங்கள் நாயகன், ‘தல’ தோனியைப் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்!


கருத்துரையிடுக

0 கருத்துகள்