Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“புள்ளிப் பட்டியலால் ஓர் அணியின் தன்மையை விளக்க முடியாது” - விராட் கோலி திட்டவட்டம்

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 556 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டார். முகமது சிராஜ் அட்டகாசமாக வெறியுடன் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற. பேட்டிங்கில் டுபிளெசிஸ், கோலி ஆகியோரது பங்களிப்பினால் 174 ரன்களை ஆர்சிபி அட்டகாசமாக தடுத்து வெற்றி கண்டது.

முகமது சிராஜின் திகைப்பூட்டும் ஆக்ரோஷ பந்து வீச்சினால் பெற்ற 4 விக்கெட்டுகள் அவருக்கு பர்ப்பிள் தொப்பியை பெற்றுத்தந்துள்ளது. கோலியும் டுபிளெசிஸும் 16 ஓவர்கள் வரை நின்றாலும் ஸ்கோர் 160 போகாமல் 137 என்று தான் இருந்தது. விராட் கோலி பவர் ப்ளேவுக்குப் பிறகு ஸ்லோ ஆகி விடுகிறார் என்பது ஒரு பெரிய விவாதமாகக் கிளம்பிக் கொண்டிருக்கின்றது. அதற்கு கோலி ஆயிரம் காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் என்னவெனில் கோலி, டுபிளெசிஸ், மேக்ஸ்வெல் நீங்கலாக இவர்களுக்குப் பிறகு ஆர்சிபியில் அடிக்க ஆளில்லை என்பதே உண்மை. இதை கோலி வெளியே சொல்ல முடியுமா? அதனால் பிட்ச், கண்டிஷன் என்றெல்லாம் சொல்ல வேண்டியிருக்கின்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்