Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

`ஜெய் ஷா கிட்ட பேசி டிக்கெட் வாங்கி கொடுங்க' - ஐபிஎல் பாஸ் கேட்ட வேலுமணிக்கு அமைச்சர் உதயநிதி பதில்

சென்னை: விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது ஐபிஎல் குறித்த எழுந்த விவாதத்திற்கு அமைச்சர் உதயநிதி அளித்த பதிலில் அதிமுகவை கலாய்த்தார் .

தமிழக சட்டப்பேரவையில், விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஏப்.11) நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், “சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. எனவே, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. பிற மாநில வீரர்களுக்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்